ஏறாவூரில் வீட்டுத் தோட்ட திட்டத்தின் கீழ் தென்னை நாற்றுக்கள் வழங்கப்பட்டது.



ஏறாவூர் சாதிக் அகமட்-
வ்வருடம் வீடு நிர்மாணத்திற்காக எமது ஏறாவூர் நகரசபையில் விண்ணப்பித்து அனுமதி பெறப்பட்ட நபர்களுக்கு தென்னை பயிர் செய்கை சபையால் "உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்" எனும் தொனிப் பொருளில் வீட்டுத் தோட்ட திட்டத்தின் கீழ் நபர் ஒருவருக்கு இரண்டு தென்னை நாற்று வீதம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வானது இன்று வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் ஏறாவூர் நகரசபை மண்டபத்தில் நகரசபையின் செயலாளர் MHM_ஹமீம் தலைமையில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் தென்னை பயிர்ச் செய்கை சபையின் பிராந்திய முகாமையாளர் P ரவிராஜ், ஏறாவூர் நகரசபையின் நிதி உதவியாளர் நிஸா லாபிர், வருமான பரிசோதகர் N வாஹித், அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ACM சப்றாஸ், M முஸம்மில், செல்வி, சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் C நிதர்சினி, முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் றுஷைதா ரசாக் என பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்
இத்திட்டத்தின் ஊடாக எமது ஏறாவூர் நகரசபை பிரிவின் கீழ் சுமார் 73 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு தென்னை நாற்றுக்கள் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டன.












இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :