இன்று அரோஹரா கோசம் விண்ணைப் பிளக்க நடந்தேறிய வைகாசி திருக்குளிர்த்தி பாடும் சடங்கு!



வி.ரி.சகாதேவராஜா-
ரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த வைகாசி திருக்குளிர்த்தி சடங்கின் இறுதி நிகழ்வான குளிர்த்தி பாடும் சடங்கு இன்று (6) செவ்வாய்க்கிழமை அதிகாலை பக்திபூர்வமாக சிறப்பாக நடைபெற்றது.

இம் முறை வைகாசி திருக்குளிர்சி சடங்கு கடந்த மூன்று வருடகாலத்தைவிட ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் மிகவும் சிறப்பாக நடைபெற்றது..

இன்று அதிகாலை 4 மணியளவில் சடங்கு பூஜையும் திருக்குளிர்த்தி பாடலும் ஆரம்பமாகி காலை 5.30 மணியளவில் நிறைவுற்றது.

கடந்த 29 ஆம் தேதி கல்யாணக்கால் நடுதலுடன் ஒருவார காலமாக பறை மேளம் குழல் ஒலிக்க, கப்புகன்மார் முன்னிலையில், உடுக்கை ஒலியுடன் பக்தர்களின் அரோஹரா கோஷம் குரவை ஒலிக்கு மத்தியில் பகலில் பச்சை கட்டல் இரவில் ஊர்சுற்றுக்காவியம் பாடல் இடம்பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் 12ஆம் திகதி எட்டாம் சடங்கு பூஜை இடம் பெறும்.

இந்நிகழ்வுகள் அனைத்தும் பண்டைய கலாசார பாரம்பரிய முறைப்படி நடைபெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :