கிழக்கு மாகாண இலங்கை மின்சார சபை அதிகாரிகளுடன் ஆளுநர் கலந்துரையாடல்!-மின்சாரம் இன்றி காணப்படும் குடும்பங்கள் குறித்து விசேட கவனம்.



எப்.முபாரக்-
கிழக்கு மாகாண இலங்கை மின்சார சபையின் பிரதி பொது முகாமையாளர் மற்றும் அதன் அதிகாரிகளுடன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் விரிவான கலந்துரையாடலொன்றை நடத்தினார்.
இச்சந்திப்பு நேற்று (6) இடம்பெற்றது.

கிழக்கு மாகாணத்தில் மின்சாரம் இன்றி 15,000 குடும்பங்கள் வசிக்கின்றனர். அவர்களுக்கு மின்சாரம் வழங்குவதற்கான பொறிமுறைகளை சமர்ப்பிக்குமாறும் அதிகாரிகளுக்கு ஆளுநர் பணிபுரைவிடுத்தார்.

மேலும் காற்றுமின்சாரம், சூரிய ஆற்றல், நீர்மின்சாரம் போன்ற புதுபிக்கத்தக்க ஆற்றல் வளங்களை கொண்டு, முழுமையாக இயங்கக்கூடிய மின்சாரத்தை வழங்கும் இலங்கையிலேயே முதல் மாகாணமாக கிழக்கு மாகாணத்தை மாற்றுவதற்கான ஆய்வினை மேற்கொண்டு, அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறும் மின்சார சபைக்கு ஆளுநர் வலியுறுத்தினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :