கல்முனையில் ஐக்கிய நாடுகள் சபை சிறுவர் நிதியத்தினால் இரண்டாவது தடவையாகவும் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு !



நூருல் ஹுதா உமர்-
ல்முனை கல்வி வலயத்தில் பொருளாதர உதவி தேவைப்படும் பாடசாலை மாணவர்களில் ஒரு தொகுதியினருக்கு ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியம் (unicef) உதவியுடன் கற்றல் உபகரணங்கள் இரண்டாம் தொகுதி இன்று வழங்கி வைக்கப்பட்டது.

கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹுதுல் நஜீம் தலைமையில் வலயக்கல்வி அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான ஏ.எச். பௌஸ், எம்.எச். றியாசா, கல்முனை கோட்டக் கல்விப் பணிப்பாளரும், உதவிக் கல்விப் பணிப்பாளருமான ஏ.பி.எப்.நஸ்மியா சனூஸ், சாய்ந்தமருது கோட்டக் கல்விப் பணிப்பாளரும், உதவிக் கல்விப் பணிப்பாளருமான என்.எம்.ஏ.மலீக், உதவிக் கல்விப் பணிப்பாளர்களான யூ.எல்.எம். சாஜீத், ஏ. அஸ்மா மலிக், ஏ. சஞ்சீவன் மற்றும் ஏ.எல்.எம். ஜஹாங்கீர் ஆசிரிய ஆலோசகர் ஏ. றாஸீக் (முறைசாராக் கல்வி) அத்துடன் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :