வாழைச்சேனை உஸ்மான் முதியோர் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தெரிவு



எச்.எம்.எம்.பர்ஸான்-
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வாழைச்சேனை 206 பி கிராம சேவகர் பிரிவில் இயங்கி வரும் உஸ்மான் முதியோர் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகளை தெரிவு செய்யும் நிகழ்வு கடந்த 2 ஆம் திகதி இடம்பெற்றது.

வாழைச்சேனை மத்தி 206 பி கிராம உத்தியோகத்தர் ஜெஸ்மிலா பானு, அபிவிருத்தி உத்தியோகத்தர் நிலோஜினி ஆகியோர் முன்னிலையில் இடம்பெற்ற இவ் நிர்வாகத் தெரிவில், தலைவராக எம்.ஐ.எம்.புகாரி, செயலாளராக எம்.எல்.பௌசுல் அமீன், உப செயலாளராக எம்.எச்.கபூர், பொருளாளராக ஏ.சீ.எம்.ஹயாத்து முகம்மது ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
அத்துடன், நிர்வாக உறுப்பினர்களாக எம்.பாத்தும்மா, றகுமத்துமா, எஸ்.எம்.சேகு அலி, ஏ.யூ.இஸ்மாயில், ஏ.சீ.ஜெமீல், ஆகியோர் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :