ஈழத்தின் முக்கியமான நவீனகவிஞர் எச்.எம். பாறூக் எழுதி தாயதி வெளியீடாக வெளிவந்த "காணாமல் போன சில ஆண்டுகள்" நூல் வெளியீட்டு விழா நேற்று முன்தினம் (21) ஞாயிற்றுக்கிழமை சம்மாந்துறை அல்மர்ஜான் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.
தென்கிழக்கு பல்கலைக்கழக தமிழ்மொழித்துறை பேராசிரியர் றமீஸ் அப்துல்லா கவிஞர் மன்சூர் ஏ காதிர் உள்ளிட்ட பிரமுகர்கள் நயவுரை நிகழ்த்தினர்.
தாயதி நிறுவுனர் தில்லை அம்மா சார்பில் எச். எம். பாறூக்கிடமிருந்து காரையன் கதன் ஃபஷ்றி ஆகியோர் முதல் பிரதியை பெற்றுக்கொண்டனர்.
சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி முன்னாள் அதிபர் கவிஞர் எழுத்தாளர்
HM பாறூக் எழுதிய "காணாமல் போன சில ஆண்டுகள்" கவிதைத்தொகுப்பு நூல் வெளியீடு விழாவில் இலக்கிய வாதிகள் அபிமானிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment