சாய்ந்தமருதில் மாபெரும் மார்க்க ஒன்று கூடல்



எம்.எஸ்.எம்.ஸாகிர்-
சாய்ந்தமருது ஜாமிஉல் இஸ்லாஹ் ஜும்ஆப் பள்ளிவாசல் தஃவா குழு ஏற்பாடு செய்துள்ள "மாபெரும் மார்க்க ஒன்று கூடல்" நாளை வெள்ளிக்கிழமை (26) மஹ்ரிப் தொழுகையை தொடர்ந்து சாய்ந்தமருது ஜாமிஉல் இஸ்லாஹ் ஜும்ஆப் பள்ளிவாசலில் இடம் பெறவுள்ளது.

"குழந்தை வளர்ப்பும் இஸ்லாமிய வழிகாட்டலும்" எனும் தலைப்பில் அஷ்ஷெய்க் ஏ.சி. தஸ்தீக் (ஹாமி, மதனி) மற்றும் "இஸ்லாமிய கலாசாரத்துக்கு எதிரான இன்றைய அனாச்சாரம்" எனும் தலைப்பில் அஷ்ஷெய்க் எஸ்.எல். நிக்ராஸ் (தவ்ஹீதி) ஆகியோர் நிகழ்வில் விசேட சொற்பொழிவாற்றவுள்ளனர்.

இம் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சியில், பெண்களுக்காகவும் விசேடமாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளதால், அனைத்து ஆண்களும் பெண்களும் என இருபாலாரும் கலந்து பயன்பெறுமாறு ஏற்பாட்டு குழுவினர் திறந்த அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :