இலங்கையின் வெளிவிவகார கொள்கையை விளங்கிக் கொள்ளுதல், ஊடகர்களுக்கான தெளிவூட்டல் செயலமர்வு



ஹஸ்பர்-
திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட பிரதேச ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வொன்று நேற்று (01) மாலை உப்புவெளி ஜேகப் பார்க் ஹோட்டலில் இடம் பெற்றது.

குறித்த செயலமர்வானது மூலோபாய கற்கைகளுக்கான திருகோணமலை நிலையத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்றது." இலங்கையின் வெளிவிவகார கொள்கையை விளங்கிக் கொள்ளுதல்" எனும் தலைப்பின் கீழ் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் வளவாளராக மூலோபாயக் கற்கைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளர் ஆ.யதீந்திரா கலந்து சிறப்பித்தார்.

இதன் போது இலங்கையினுடைய வெளிநாட்டு கொள்கைகள் மற்றும் இராஜதந்திர செயற்பாடுகள் தொடர்பில் விரிவான விடயங்களை திறம்பட வளவாளரால் தெளிவுபடுத்தப்பட்டதுடன். பிரதான இரு கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி போன்றவற்றின் இராஜதந்திர அரசியல் கொள்கைகள் மூலம் சர்வதேச உறவுகள் ஏனைய நாடுகளின் உதவி ஏன் தேவை போன்ற விடயங்களும் தெளிவுபடுத்தப்பட்டன.
இதில் ஊடகவியலாளர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :