கமு/கமு/மல்ஹருஸம்ஸ் மகா வித்தியாலய வித்தியாரம்ப விழா



நூருள் ஹுதா உமர்-
சாய்ந்தமருது கமு/கமு/மல்ஹருஸ் ஷம்ஸ் மகா வித்தியாலயத்தில் தரம் 1 க்கு மாணவர்களை வரவேற்கும் வித்தியாரம்ப விழா செவ்வாய்கிழமை (25) பாடசாலையின் அதிபர் எம்.சீ. நஸ்லின் றிப்கா அன்சார் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், பாடசாலையில் தரம் 02 இல் கல்வி பயிலும் மாணவர்களால் மாலை அணிவிக்கப்பட்டு புதிதாக அனுமதி பெற்ற தரம் ஒன்று மாணவர்கள் வரவேற்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் கல்முனை கல்வி மாவட்ட பிரதம பொறியியலாளர் ஏ.எம். சாஹீர் பிரதம அதிதியாக கலந்து கொண்டதோடு,
உதவிக் கல்விப் பணிப்பாளரும் சாய்ந்தமருது கோட்ட கல்வி அதிகாரியுமான என்.எம்.ஏ. மலீக், கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை அதிபர் எம்.ஐ. ஜாபிர், ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும், சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை சிரேஷ்ட வைத்திய அதிகாரி டாக்டர் சனூஸ் காரியப்பர், பாடசாலை EPSI இணைப்பாளர் ஏ.ராசிக் ஆகியோர் விசேட அதிதிகளாக கலந்து கொண்டனர்.

பாடசாலையின் பிரதி அதிபர் ஏ.எல்.எம். தன்ஸில், பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவ சங்க உறுப்பினர்கள், கல்விசாரா உத்தியோகத்தர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

தரம் ஒன்று மாணவர்களுக்கு அகரம் எழுதப்பழக்கியதோடு இனிப்பு வழங்கப்பட்டு மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டது.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :