கல்முனை பொதுச் சந்தை வர்த்தக சங்கத்தின் மாபெரும் இப்தார் நிகழ்வு.



பாறூக் ஷிஹான்,சர்ஜுன் லாபீர்-
ல்முனை மாநகர பொதுச் சந்தை வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் புனித ரமழான் 11வது நோன்பின் இப்தார் நிகழ்வு நேற்று(3) சங்கத்தின் தலைவர் எம்.ஜமால்தீன் தலைமையில் கல்முனை சந்தை தொகுதியில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவினை மெளலவி ஏ.சி.எம் முஹைத்தீன்(மன்பஈ) மேற்கொண்டார்.

கடந்த வாரம் கல்முனை மாநகர பொதுச் சந்தை வர்த்தக சங்கத்தின் புதிய செயற்குழு உறுப்பினர்களாக 40ற்கு மேற்பட்டோர் தெரிவு செய்யப்பட்டதையடுத்து இவ் இப்தார் நிகழ்வு அச்செயற்குழு உறுப்பினர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இவ் இப்தார் நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி,கல்முனை மாநகர ஆணையாளர்
ஏ.எல்.எம் அஸ்மி,உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம் அஸீம்,கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் எம்.பீ.ஏ வாஜீத்,பிரதேச செயலக கணக்காளர் யூ.எல் ஜவாஹீர்,மாநகர கணக்காளர் கே.எம் ரியாஸ்,உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர், மாநகர பொறியியலாளர் ஏ.ஜே.ஹலீம் ஜெளஸி,கல்முனை தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி ரம்சீன் பக்கீர்,கல்முனை பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் எம்.என்.எம் ரம்சான்,சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம் சாலிஹ்,அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர் கே.எல் யாஸீன் பாவா உட்பட பெரும்பாலான வர்த்தகர்கள்,வைத்தியர்கள், பொதுச் சுகாதார அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வுக்கான நன்றியுரை வர்த்தக சங்க செயலாளர் ஏ.எல் கபீரினால் நிகழ்த்தப்பட்டது.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :