சாய்ந்தமருதில் நாபீர் பௌண்டேசனின் இப்தார் நிகழ்வு!



ருடாவருடம் நாபீர் பௌண்டேசன் நடாத்தும் புனித ரமழான் நோன்பின் பிரமாண்டமான இப்தார் நிகழ்வு இன்று (2023.04.09) சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலயத்தில் சமூக செயற்பாட்டாளர் பாயிஸ் கரீம் தலைமையில் இடம்பெற்றது.

நாபீர் பௌண்டேசனின் ஸ்தாபகரும் பிரபல சமூக செயற்பாட்டாளரும் ECM நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் பொறியியலாளருமான அல் ஹஜ் உதுமான்கண்டு நாபீர் அவர்களின் முழுமையான அனுசரணையுடனும் வழிகாட்டலின் கீழும் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதான மார்க்க சொற்பொழிவை அஷ்செய்க் எம்.எச்.ஆஷிக் இலாகி வாரி அவர்கள் நிகழ்த்தினார்.

இதன்போது நிகழ்வின் ஏற்பாட்டாளர் அல் ஹஜ் உதுமான்கண்டு நாபீர் அவர்களின்; மரணித்த தந்தையாருக்காக துஆ பிராத்தனையும் இடம்பெற்றது.

நிகழ்வில் அல் ஹஜ் உதுமான்கண்டு நாபீர் அவர்களது சார்பில் அவரது மகன், ECM நிறுவனத்தின் முகாமையாளர் மற்றும் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டதுடன் சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள பிரமுகர்கள் ஊடகவியலாளர்கள் நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.



























இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :