தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அதிகார சபையின் விசேட ஊடக அறிக்கை



தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அதிகார சபை தொடர்பில் சில ஊடகங்களில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. அவற்றை முற்றாக நிராகரிக்கின்றோம். கீழ்வரும் படிமுறைக்கமையவே நீர் கட்டணம் அறிவிடப்படுகின்றது என்று தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அதிகார சபை அறிவித்துள்ளது.

இது தொடர்பில் குறித்த சபையால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,

நுகர்வோர் மாதாந்தம் நுகரும் நீரின் அளவின் அடிப்படையில் நீர் கட்டணம் அறவிடப்படுவதுடன், குறித்த கட்டணத்தை 14 நாட்களுக்குள் செலுத்தினால் 1.5. வீத கழிவு வழங்கப்படுகின்றது.

நீர் கட்டணப் பட்டியல் கிடைக்கப்பெற்று 30 நாட்களுக்குள் கட்டணத்தை செலுத்த தவறின், மொத்த நிலுவையில் மேலதிகமாக 2.5. வீதம் அறிவிடப்படும்.
அரச நிறுவனங்களின் நீர் விநியோகத்துக்கான கட்டணம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் அதனை செலுத்துவதற்கு மேலதிகமாக 90 நாட்கள் வழங்கப்படும்.

தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அதிகார சபையானது, அதிக செலவீனத்தில் சுத்திகரிக்கப்பட்ட மற்றும் பாதுகாப்பான குடிநீரை தொடர்ச்சியாக நுகர்வோருக்கு வழங்கிவருகின்றது. இதற்கான கட்டணம்கூட நியாயமான அடிப்படையிலேயே அறிவிடப்படுகின்றது.

சேவைகளை தடையின்றி வழங்குவதற்கு நுகர்வோர் கட்டணத்தை செலுத்த வேண்டியது அத்தியாவசியமானது. அவ்வாறு தாமதமின்றி கட்டணத்தை செலுத்தினால் அது தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அதிகார சபையின் முகாமைத்துவத்துக்கு சாதகமான காரணியாக அமையும்.

நுகர்வோருக்கு முன்னறிவித்தல் வழங்கிய பின்னர், அதிகாரமளிக்கப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றியே நீர் துண்டிப்பு இடம்பெறுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :