திருகோணமலை Success Pre School முன்பள்ளி சிறார்களின் கலைவிழா மற்றும் பரிசளிப்பு விழா நேற்று ( 18)சனிக்கிழமை திருகோணமலை ஆர்.கே.எம். ஸ்ரீ கோணேஸ்வரா இந்து கல்லூரி ஆரம்ப பிரிவு பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வானது Success Pre School முன்பள்ளி பாடசாலையின் சிரேஷ்ட ஆசிரியர் திருமதி சாஷியா முபாரக் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் உதவி பணிப்பாளர் சிவப்பிரகாசம் உதயகுமார் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.
இந் நிகழ்வில் முன்பள்ளி சிறார்களின் கலை நிகழ்ச்சி மற்றும் எதிர் வரும் வருடத்தில் அரசாங்கப் பாடசாலைகளில் இணையவுள்ள முன்பள்ளி சிறார்களுக்கான விசேட பரிசில்கள் வழங்கப்பட்டதோடு, அனைத்து முன்பள்ளிச் சிறார்களையும் வாழ்த்திப் பரிசில்கள் வழங்கப்பட்டன.
இதில் முன்னாள் திருகோணமலை நகர சபை உறுப்பினர் எம்.எம்.முக்தார் மற்றும் முன்பள்ளி ஆசிரியைகள், பெற்றார்கள் என பலர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment