தேசிய மல்யுத்த போட்டியில் மட்டக்களப்பு அணி முதலிடம்.


வி.ரி. சகாதேவராஜா-
லங்கை சிறைச்சாலைகளுக்கு இடையில் இடம்பெற்ற மல்யுத்த போட்டியில் தேசியரிதியில் மட்டக்களப்பு அணி முதல் இடம் பெற்று சாதனை படைத்துள்ளது.
அகில இலங்கை சிறைச்சாலைகளுக்கு இடையில் இடம்பெற்ற மல்யுத்த போட்டி கடந்த 25.02.2023ம்திகதி பொலநறுவை றோயல் கல்லூரியில் இடம்பெற்றது. இப் போட்டியில் மட்டக்களப்பு சிறைச்சாலையை சேர்ந்த அணி கலந்து கொண்டு 9 தங்கம், 1 வெள்ளி மற்றும் 4வெண்கல பதக்கங்களை பெற்று அகில இலங்கை சிறைச்சாலைகளுக்குள் முதல் இடத்தை பெற்றுக்கொண்டது..

இப் போட்டியில் காரைதீவு மண்ணைச் சேர்ந்த இரு இளம் வீரர்கள் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

காரைதீவைச்சேர்ந்த அ.பிறேமகாந்தன் 97-125கிலோ எடைகொண்ட போட்டியில் கலந்து கொண்டு தங்க பதக்கமும் மற்றும் அஜித் 64-71கிலோ எடைகொண்ட போட்டியில் கலந்து கொண்டு வெண்கல பதக்கமும் பெற்றுக்கொண்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :