அரசாங்கத்தின் பெரும்போக நெல் கொள்வனவு செய்யப்படும் வேலைதிட்டம் நாவிதன்வெளியில் !


நூருல் ஹுதா உமர்-
2022/2023ம் ஆண்டிற்கான பெரும் போகத்தில் நெல் அறுவடைக்கான நியாயமான விலையை விவசாயிகளுக்கு பெற்றுக்கொடுத்தல், மிகை அறுவடையினை அரசாங்கம் கொள்முதல் செய்தல், இக்கட்டான பொருளாதார நிலைமையினால் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குதல் ஆகிய நோக்கங்களினை அடிப்படையாகக் கொண்டு 2022/2023 ம் ஆண்டிற்கான பெரும் போக நெல் கொள்வனவு வேலைத்திட்டம் அதிமேதகு ஐனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தீர்மானத்திற்கமைய நாடு பூராகவும் மேற் கொள்ளப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட அரிசி ஆலைகளில் நெல் கொள்வனவுகளை மேற்கொள்ளும் செயற்திட்டம் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் தலைமையில் மத்தியமுகாமில் இடம்பெற்றது.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீஸன் கலந்து கொண்டதோடு கெளரவ அதிதிகளாக அம்பாறை மாவட்ட விவசாய பணிப்பாளர் எம்.எஸ்.ஏ கலீஸ், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், அரிசி ஆலை உரிமையாளர்கள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர் நளீர் அபூபக்கர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :