கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயமானது, இஸ்லாமாபாத் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் மற்றும் குவெட்டாவின் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லூரியில் பயின்ற இலங்கை பட்டதாரிகளுக்கு இடையே மற்றுமொரு ஒன்றுகூடல் மற்றும் இரவு விருந்தூபகார நிகழ்வினை கிங்கஸ்பரி ஹோட்டலில் நடைபெற்றது.
நிகழ்வுக்கு அன்மையில் இலங்கை வந்திருந்த பாகிஸ்தான் கூட்டுப் படைத் தலைவர்கள் குழுவின் தலைவர் ஜெனரல் சாஹிர் கலந்து கொண்டாா்.
இந்த இராப்போசன விருந்தில் இலங்கை இராணுவத்தின் கடற்படை ,விமானப்படைகளின் சிரேஷ்ட ஓய்வுபெற்ற மற்றும் சேவையாற்றும் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். இவா்கள் இலங்கையில் வடக்கு கிழக்கு யுத்த காலத்தில் விசேட பயிற்சிகளை பாக்கிஸ்தானின் பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் பயின்றுள்ளாா்கள் இலங்கையிலிருந்து பாக்கிஸ்தானில் பாதுகாப்புத்துறையில் பயின்ற நுாற்றுக்கும் மேற்பட்ட பிரகேடியர்கள், கப்டன்கள் மேஜர்கள் கலந்துகொண்டமைகயும் குறிப்பிடத்தக்கது.
இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதியும், பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மூத்த பட்டதாரியுமான ஓய்வுபெற்ற அட்மிரல் ஜெயந்த் பெரேரா, இந்நிகழ்வில் கருத்துதெரிவிக்கையில், முன்னாள் மாணவர்களுக்கு வருகை தந்துள்ள பணியாளர்கள் குழுவின் கூட்டுத் தலைவர்கள் குழுவுடன் கலந்துரையாடுவதற்கான வாய்ப்பை வழங்கியமைக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது இலங்கையின் மனிதாபிமான நடவடிக்கைகளில் பாகிஸ்தானின் பங்களிப்பைப் பற்றிக் குறிப்பிட்ட அவர், இரு நாடுகளும் எப்போதும் வலுவான உறவுகளை அனுபவித்து வருவதாகக் குறிப்பிட்டார். இராணுவ மற்றும் இராஜதந்திர வழிகள் மூலம் உள்நாட்டு மற்றும் சர்வதேச அரங்கில் பாகிஸ்தான் இலங்கை மீது வழங்கிய ஆதரவை ஒருபோதும் மறக்கமுடியாது என்றும் குறிப்பிட்ட அவர் பழைய மாணவர் சங்கங்களின் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.
இவ்விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட பாகிஸ்தான் கூட்டுப் படைத் தலைவர்கள் குழுவின் தலைவர் ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் மிர்சா உரையாற்றும் போது, "இலங்கையுடனான நெருக்கமான உறவுகளில் பாகிஸ்தான் எப்போதும் பெருமை கொள்கிறது. இரு நாடுகளும் நெருங்கிய ஒத்துழைப்பிணை மிக நீண்ட காலமாக பேணி வருகின்றன. மேலும் இருதரப்பு உறவுகள் மென்மேலும் வளர்ச்சி அடைந்திருப்பது மிகவும் சந்தோசத்திற்குரிய விடயமாகும்" எனக் குறிப்பிட்டார். குறிப்பாக பாதுகாப்புத் துறையில் இலங்கையும் பாகிஸ்தானும் தொடர்ந்து நெருக்கமான, சுமூகமான மற்றும் பரஸ்பர ஆதரவான உறவுகளைப் பேணி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார். "இரு நாடுகளும் கடினமான காலங்களில் ஒருவருக்கொருவர் உதவியுள்ளன. பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு பரஸ்பர நம்பிக்கை மற்றும் பிராந்திய அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணுதல் போன்ற விடயங்களை அடிப்படையாகக் கொண்டது. இலங்கையின் ஐக்கியம், பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு பாகிஸ்தான் எப்போதும் ஆதரவளித்து வருகிறது" என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
பாகிஸ்தானின் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் உமர் ஃபாரூக் பர்கி நன்றியுரை ஆற்றுகையில், பாகிஸ்தானும் இலங்கையும் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றில் பாரிய ஒத்துழைப்பைக் கொண்டுள்ள இரு நாடுகளாகும் என்று தெரிவித்தார். பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையில் நிலவும், என்றும் நிலைத்திருக்கும் நட்புறவுகளைப் பாராட்டிய அவர், அனைத்துத் துறைகளிலும் பரஸ்பர ஒத்துழைப்பை அதிகரிப்பதற்காக எப்போதும் நெருக்கமாக பணியாற்றுவதற்கான அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் குறிப்பிட்டார். கடந்த காலங்களில் இராணுவ உபகரணங்களில் பயிற்சி மற்றும் உதவிகள் மூலம் இலங்கை ஆயுதப்படைகளின் திறனை மேம்படுத்தியது போன்று தற்போதும் பாகிஸ்தான் அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டா
0 comments :
Post a Comment