கல்குடா யங் ஸ்டாரின் ஒரு வருட பூர்த்தி நிகழ்வு; கௌரவிப்பு, கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு



எச்.எம்.எம்.பர்ஸான்-
ல்குடா யங் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்த நிகழ்வு மிகவும் சிறப்பான முறையில் வெள்ளிக்கிழமை (17) இடம்பெற்றது.

கழகத்தின் தலைவர் ஐ.எம்.றிஸ்வின் (றிஸ்வி) தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட பிரிக்கட் இராணுவ முகாமின் சிவில் விவகாரங்களுக்கான இராணுவ அதிகாரி தம்மிக்க வீரசிங்க, உன்னிச்சை இராணுவ முகாமின் கட்டளைத் தளபதி இசுறு சேனாநாயக்க மற்றும் மீராவோடை மீரா ஜும்ஆப் பள்ளிவாசல் தலைவர் ஏ.எல்.அலியார் ஹாஜியார், ஓட்டமாவடி தேசிய பாடசாலை அதிபர் எம்.ஏ.ஹலீம் இஸ்ஹாக், ஹயா பிரைவட் லிமிடெட் பணிப்பாளர் ஏ.எல்.நஜிமுதீன், ஓட்டமாவடி வர்த்தக சங்க தலைவர் ஏ.சீ.எம்.நியாஸ்தீன் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில், சமூகப் பணியாற்றிவரும் நபர்களின் சேவைகளைப் பாராட்டி கௌரவித்து நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டதுடன், இராணுவ அதிகாரிகளும் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

கலை நிகழ்ச்சிகளுடன் இடம்பெற்ற இந்நிகழ்வின் போது, தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :