கலாநிதி சத்தார் எம்.பிர்தௌஸின் ஒய்வு நிலை கல்முனை கல்வி வலயத்திற்கு பெரும் இழப்பாகும்.



பணி நயப்பு விழாவில் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹ்துல் நஜீம்

கலாபூஷணம் பி.எம்.எம்.ஏ.காதர்-
ல்முனை கல்வி வலய தமிழ் மொழி ஆசிரிய மையத்தின் ஏற்பாட்டில் கல்விப் பணியில் 33வருடங்களை நிறைவு செய்யது ஓய்வு பெற்ற கல்முனை கல்வி வலைய உதவிக் கல்விப் பணிப்பாளர் கலாநிதி சத்தார் எம்.பிர்தௌஸுக்கான பணி நயப்பு விழா கடந்த சனிக்கிமை (31-12-2022) மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரி தேசிய பாடசாலை அஷ்ரப் ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றது.

கல்முனை கல்வி வலய தமிழ் மொழி ஆசிரிய மையத்தின் தலைவரும் ஆசிரியருமான ஜெஸ்மி எம்.மூஸா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பிரதம அதிதியாக கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹ்துல் நஜீம் கலந்து சிறப்பித்தார்.முதன்மை அதிதிகளாக தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை,கலாசார பீடத்தின் பீடாதிபதி எம்.எம்.பாஸில்.ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் பதிவாளர் எம்.எப்.ஹிபத்துல் கரீம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கௌரவ அதிதிகளாக நீதிபதி எம்.எச்.எம்.ஹம்ஸா,கல்முனை வலயக் கல்வி அலுவலக கணக்காளர் வை.ஹபீபுல்லாஹ்,மட்டக்களப்பு கல்வியற் கல்லூரி சிரேஷ;ட விரிவுரையாளர் சத்தார் எம்.சதாத் ஆகியோருடன் கல்வி அதிகாரிகள், அதிபர்,ஆசிரியர்கள் உள்ளீட்ட கல்முனை கல்வி வலய தமிழ் மொழி ஆசிரிய மையத்தின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இங்கு தேசிய கீதம்,தமிழ் வாழ்த்துப் பாடல் பாடப்பட்டதுடன் வரவேற்பு நடனமும் இடம்பெற்றது.ஓய்வு பெற்ற உதவிக் கல்விப்பணிப்பாளர் கலாநிதி சத்தார் எம்.பிர்தௌஸ் பற்றிய'தீரா ஆசிரியம்'என்ற நூலும் வெளியிடப்பட்டதுடன் அவருக்கு பொன்னாடை போர்த்தி,வாழ்த்துப்பத்திரம்,நினைவுச்சின்னம்,பரிசுப் பொதி என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டார்.அத்துடன் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டன.பலர் பாடல்களையும் பாடி சபையோரை மகிழ்வித்தனர்.ஆசிரியர்களான ஏ.ஆர்.எம்.புஹாரி,ஏ.எம்.றியாஸ் ஆகியோர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்கள்.

இங்கு பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹ்துல் நஜீம் உரையாற்றுகையில்:-உதவிக் கல்விப் பணிப்பாளர் கலாநிதி சத்தார் எம்.பிர்தௌஸ் மிக நீண்ட காலமாக தமிழ் மொழிக்கு ஆற்றிய பங்களிப்பு மிகவும் கனதியானது.தமிழ் முஸ்லிம் என்ற வேறுபாடு இல்லாமல் எல்லோரையும் ஒன்றிணைத்த இந்த விழா எடுத்திருப்பது இவர் தமிழுக்கு ஆற்றிய சேவைக்கான பெறுபேறாகும்.

இவரது ஒய்வு நிலை கல்முனை கல்வி வலயத்திற்கு பெரும் இழப்பாகும்.தமிழ் பாடத்தை கற்பிக்கின்ற ஆசிரியர்கள் கலாநிதி சத்தார் எம்.பிர்தௌஸின் கற்பித்தலை முன்மாதிரியாகக் கொண்டு பின் தொடரவேண்டும்.பெற்றோரின் மறைவின் பின்னர் தனது அயராத முயற்சியினால் நான்கு பட்டங்களைப் பெற்றிருப்பது பெரும் சாதனையாகும்.அது மாத்திரமன்றி தனது உடன் பிறப்புக்களையும் கல்வியின் பக்கம் திருப்பி நல்வழிகாட்டியவர்.இன்று இவர் ஓய்பெற்றாலும் தமிழ் மொழி வளர்ச்சிக்காக இன்னும் உழகை;க வேண்டம் என கேட்டக்கொள்கின்றேன் என்றார்.

முதன்மை அதிதியாகக் கலந்து கொண்ட தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை,கலாசார பீடத்தின் பீடாதிபதி எம்.எம்.பாஸில் உரையாற்றுகையில்:-பல்துறைகளை சிலாகித்துப் பேசுகின்ற கிராமம் மருதமுனையாகும்.இங்கு தமிழ் மொழி கற்பிப்பதில் புகழ்பூத்த பெருமைக்குரியவர் கலாநிதி சத்தார் எம் பிர்தௌஸ் ஆவார்.இவரது தமிழ் கற்பித்தல் மிகவும் ஆழமானது மாணவர்களை இலகுவில் சென்றடையக்கூடியதுமாகும். கலாநிதி சத்தார் எம் பிர்தௌஸ் பல கஷ;டங்களை எதிர் கொண்டு பல பட்டங்களைப் பெற்றவர் இவரத 33வருட பணியென்பது மிகவும் கனதியானது ஓய்வு பெற்றாலும் தமிழை வளர்க்க இவர் இன்னும் பாடுபட வேண்டும் என்பது எனது அவாவாகும் என்றார்.

முதன்மை அதிதியாகக் கலந்து கொண்ட ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் பதிவாளர் எம்.எப்.ஹிபத்துல் கரீம் உரையாற்றுகையில்:-தமிழுக்கு எல்லொரும் சேர்ந்த விழா எடுத்திருப்பதுமிகவும் சிறப்பானதாகும். கிழக்கில் தென்கிழக்குப் பல்கலைக்கழகம்,கிழக்குப் பல்கலைக்கழகம் என்பன இவரை விரிவுரையாளராக நியமிக்கமுடியாமல் போனமை இந்த பல்கலைக் கழகங்களுக்கு கிடைத்த துரதிர்ஷ்டமாகும். கலாநிதி சத்தார் எம் பிர்தௌஸ் எதிர்கால சமூகத்திற்காக இன்னும் தமிழ்பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.














இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :