யானையால் பலியானவரின் மனைவிக்கு இன்று ஒரு லட்சம் ரூபாய் நஷ்டஈடு!



வி.ரி. சகாதேவராஜா-
யானைத் தாக்குதலில் பலியான குடும்பஸ்தர் ஒருவரின் மனைவிக்கு ஒரு லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்கப்பட்டது.

இச்சம்பவம் திருக்கோவில் பிரதேசத்தில் இடம்பெற்றது.

கடந்த 2023.01.05 ஆம் திகதி தங்கவேலாயுதபுரத்தில் காட்டு யானை தாக்குதலுக்குள்ளாகி மரணம் அடைந்த அமரர் புவிதராசன் ரசிகரனின் குடும்பத்திற்கே இந் நஷ்டஈடு வழங்கப்பட்டது.

வனஜீவராசிகள் திணைக்களத்தின் ஊடாக அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு இதனை வழங்கியது. இழப்பீட்டு தொகையாகிய ரூபா 1 மில்லியன் தொகையின் முதற்கட்டமாக இன்று(17) செவ்வாய்க்கிழமை ரூபா 100000/= அவரது மனைவியிடம் திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் வழங்கிவைத்தார்

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :