யானைத் தாக்குதலில் பலியான குடும்பஸ்தர் ஒருவரின் மனைவிக்கு ஒரு லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்கப்பட்டது.
இச்சம்பவம் திருக்கோவில் பிரதேசத்தில் இடம்பெற்றது.
கடந்த 2023.01.05 ஆம் திகதி தங்கவேலாயுதபுரத்தில் காட்டு யானை தாக்குதலுக்குள்ளாகி மரணம் அடைந்த அமரர் புவிதராசன் ரசிகரனின் குடும்பத்திற்கே இந் நஷ்டஈடு வழங்கப்பட்டது.
வனஜீவராசிகள் திணைக்களத்தின் ஊடாக அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு இதனை வழங்கியது. இழப்பீட்டு தொகையாகிய ரூபா 1 மில்லியன் தொகையின் முதற்கட்டமாக இன்று(17) செவ்வாய்க்கிழமை ரூபா 100000/= அவரது மனைவியிடம் திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் வழங்கிவைத்தார்
0 comments :
Post a Comment