தமிழரசுக்கட்சிக்கு நிச்சயம் தமிழ் மக்கள் ஆணை தருவார்கள்! தவிசாளர் ஜெயசிறில் நம்பிக்கை



வி.ரி.சகாதேவராஜா-
ம்பாறை மாவட்டத்திலே ஏழு சபைகளிலே போட்டியிடுவதற்கு நாங்கள் கலையரசன் எம் பி தலைமையிலே வேட்புமனு தாக்கல் செய்து இருக்கின்றோம். இம்முறை மக்களே எமது வேட்பாளர்களை தேர்வு செய்து இருக்கின்றார்கள்.எனவே வெற்றி நிச்சயம்.

இவ்வாறு அம்பாறைக்கச்சேரியில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு திரும்பு கையில் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தரும் காரைதீவு பிரதேச சபை தவிசாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்..
உள்ளூராட்சி தேர்தல் சட்ட விதிகளுக்கு அமைய இம்முறை தமிழரசுக் கட்சி தனித்து போட்டியிடுகின்றது. பங்காளி கட்சிகள் ஒரு பக்கத்திலே போட்டியிடுகின்றார்கள். கடந்த முறை காரைதீவில் நான்கு வட்டாரங்களிலும் தமிழரசுக்கட்சி வெற்றிபெற்றது. ஆனால் அம்பாறை மாவட்டத்தில் கணிசமான உறுப்பினர்களை எடுத்திருந்தாலும் காரைதீவைத் தவிர ஏனைய சபைகளை கைப்பற்ற முடியவில்லை. ஏனென்றால் உள்ளாட்சி மன்ற தேர்தல் நடைமுறைகள் அப்படி.

எனவே, தேர்தலில் பிரிந்து நின்றாலும் ஆட்சி அமைப்பதற்கு நாங்கள் ஒன்று சேருவோம் .தமிழ் மக்களின் நீண்ட கால அரசியல் தேவைக்காக நாங்கள் ஒற்றுமையாக பயணிப்போம் .அதில் எந்தவிதமான மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. தேர்தலுக்காக பிரிந்திருக்கின்றோம். இது பிளவு அல்லது முரண்பாடு அல்ல. நிச்சயம் நமக்கு தமிழ் மக்கள் ஆணை தருவார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :