அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ,
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் - திட்டமிட்டபடி நடைபெறுமாயின் முகாவின் அபரிதமான வெற்றி தவிர்க்க முடியாத ஒன்றாக மாறும்.
முஸ்லிம் காங்கிரஸ் - எமது தாய்க் கட்சி , அந்தக் கட்சி மட்டும்தான் முஸ்லிம்களின் கட்சி என்பதை உணர்ந்த பலர் இன்று மீண்டும் கட்சியோடு மீளிணைந்து வருகின்றனர்.
முகா தலைவர் ரவூப் ஹக்கீம் - பல விட்டுக்கொடுப்புக்களுடன் கட்சியை பலப்படுத்தி வருகின்றார்.
கல்முனை மாநகர சபை தேர்தல் விடயம் நீதிமன்றம் வரை சென்றுள்ளதால் - கவ்முனை மாநகர முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் - மாவட்டத்தின் ஏனைய சபைகளுக்கான தேர்தல் விடயத்தில் கரிசனையோடு செயற்படுவார்கள் என்ற நம்பிக்கை கட்சித் தலைமைக்கும் எனக்கும் பூரண நம்பிக்கை உண்டு.
முஸ்லிம்களின் கட்சி என்று தம்மைத்தாமே மார்தட்டிக்கொள்ளும் ஓரிரு கட்சிகள் - இன்றைய சூழ்நிலையில் வலுவிழந்து - உட்பூசல் அதிகரித்து, வேட்பாளர் இன்றி திணறிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் - அக்கட்சிகள் மீது - அக்கட்சிகளின் போராளிகளே அதிருப்தியடைந்த நிலையில் காணப்படுகின்றனர்.
இவ்வாறான நிலையில் - முகா மட்டுமே பூரணமாக வேட்பாளர்களை நியமித்து வேட்புமனுக்களையும் தாக்கல் செய்துள்ளன.
எனவே - உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அம்பாரை மாவட்டத்தில் உள்ள அனைத்து முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் சபைகளை கைப்பற்றுவது மட்டுமன்றி - மட்டக்களப்பு மற்றும் திருகோணமலையிலும் இச்சாதனை நிலை நாட்டப்படும் என்பதை உறுதியாக உறுதிப்படுத்துகிறேன் என்றும் யஹியாகான் மேலும் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்களின் கட்சி என்று தம்மைத்தாமே மார்தட்டிக்கொள்ளும் ஓரிரு கட்சிகள் - இன்றைய சூழ்நிலையில் வலுவிழந்து - உட்பூசல் அதிகரித்து, வேட்பாளர் இன்றி திணறிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் - அக்கட்சிகள் மீது - அக்கட்சிகளின் போராளிகளே அதிருப்தியடைந்த நிலையில் காணப்படுகின்றனர்.
இவ்வாறான நிலையில் - முகா மட்டுமே பூரணமாக வேட்பாளர்களை நியமித்து வேட்புமனுக்களையும் தாக்கல் செய்துள்ளன.
எனவே - உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அம்பாரை மாவட்டத்தில் உள்ள அனைத்து முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் சபைகளை கைப்பற்றுவது மட்டுமன்றி - மட்டக்களப்பு மற்றும் திருகோணமலையிலும் இச்சாதனை நிலை நாட்டப்படும் என்பதை உறுதியாக உறுதிப்படுத்துகிறேன் என்றும் யஹியாகான் மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment