போசாக்கு குன்றிய குழந்தைகளுக்கு 250 சத்துமாப் பொதிகள்.



வி.ரி.சகாதேவராஜா-
சமகால பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டு போசாக்கு குன்றிய குழந்தைகளுக்கு மட்டக்களப்பு றோட்டரிக்கழகம் 250 சத்து மாப்பொதிகளை நேற்று முன்தினம் வழங்கி வைத்தது.

மட்டக்களப்பு றோட்டரி கழகம், செங்கலடி பிரதேச சுகாதார சேவைகள் திணைக்களத்தோடு இணைந்து அப்பிரதேசத்திலுள்ள போசாக்கு குன்றிய குழந்தைகளுக்கான 250 சத்து மா பொதிகளை வழங்கி வைத்தது .

இந் நிகழ்வானது மட்டக்களப்பு றோட்டரி கழக தலைவர் றோட்டரியன் புஞ்சியப்பு ரமணதாச தலைமையில் நடைபெற்றது.
அப்பிரதேசத்திற்கு பொறுப்பான மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி திருமதி பாத்திமா பஸ்நத்தின் பங்குபற்றலுடன் செங்கலடி பிரதேச சுகாதார சேவைகள் அலுவலகத்தில் இந் நிகழ்வு இடம்பெற்றது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :