வாழைச்சேனை ஆயிஷாவில் கௌரவிப்பும், சேவை நலன் பாராட்டு நிகழ்வும்



எச்.எம்.எம்.பர்ஸான்-
வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தில் கௌரவிப்பும், சேவை நலன் பாராட்டு நிகழ்வும் புதன்கிழமை (21) இடம்பெற்றது.

இதில், ஆயிஷா பாடசாலையிலிருந்து வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் பெற்றுச் சென்ற ஆசிரியர்களின் சேவையை பாராட்டி நினைவுப் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர்களின் பிள்ளைகள் க.பொ.த. சாதாரண தரம் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்டமைக்காக பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன், 32 வருட ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் எஸ்.எம்.ஆதம் லெப்பை ஆசிரியரும் கௌரவிக்கப்பட்டார்.

பாடசாலை அதிபர் என்.சஹாப்தீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அதிதியாக கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் வீ.ரீ.அஜ்மீர் கலந்து கொண்டார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :