இல்மா ஆங்கில கற்கை நெறி நிறுவனத்தினால் Kiddies English Concert எனும் நிகழ்வு சிறுவர்களின் ஆற்றல்களை வெளிப்படுத்தும் நிகழ்வு


ஏறாவூர் சாதிக் அகமட்-

"Enjoy Learning English" எனும் தொனிப்பொருளில் இன்று தன்னாமுனையில் அமைந்துள்ள மியாமி மண்டபத்தில் இல்மா ஆங்கில கற்கை நெறியின் பணிப்பாளர் ML குழாப்தீன் ஆசிரியர் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் செய்யத் அலி ஸாஹிர் மௌலானா, ஜனாபா சிறின் தனூஜா மௌலானா அவர்களும் ( மட்டக்களப்பு கிழக்கு சர்வதேச கல்லூரியின் முகாமைத்துவப் பணிப்பாளர் மற்றும் ஸ்தாபகர்)

கௌரவ அதிதிகளாக ஏறாவூர் நகரசபை கௌரவ தவிசாளர் MS.நழிம், ஓய்வு பெற்ற அதிபர் ஜனாப் ACM சயிட், ஓய்வு பெற்ற ஆசிரியர் MS அப்துல்ஹை, அவர்களும்

சிறப்பு அதிதிகளாக ஏறாவூர் நகரசபை கௌரவ உறுப்பினர் MSM றியாழ், மட்/மம/முனீறா பாலிகா மகா வித்தியாலய அதிபர் NM மஹாத், மட்/மம/றஹ்மானியா மகா வித்தியாலயத்தின் அதிபர் DM உவைஸ், மட்/மம/அல் ஜிப்ரியா வித்தியாலயத்தின் அதிபர் MI முகம்மட் அவர்களும்,

இல்மா ஆங்கில கற்கை நிறுவனத்தில் கல்வி பயிலும் மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

இந்நிகழ்வானது இல்மா ஆங்கில கற்கை நிறுவனத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் ஆற்றல்களை வெளிப்படுத்தும் முகமாக இந்நிகழ்வு அமைந்திருந்தது.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகளால் மாணவர்களுக்கு சான்றிதழ்களும், பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :