"Enjoy Learning English" எனும் தொனிப்பொருளில் இன்று தன்னாமுனையில் அமைந்துள்ள மியாமி மண்டபத்தில் இல்மா ஆங்கில கற்கை நெறியின் பணிப்பாளர் ML குழாப்தீன் ஆசிரியர் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் செய்யத் அலி ஸாஹிர் மௌலானா, ஜனாபா சிறின் தனூஜா மௌலானா அவர்களும் ( மட்டக்களப்பு கிழக்கு சர்வதேச கல்லூரியின் முகாமைத்துவப் பணிப்பாளர் மற்றும் ஸ்தாபகர்)
கௌரவ அதிதிகளாக ஏறாவூர் நகரசபை கௌரவ தவிசாளர் MS.நழிம், ஓய்வு பெற்ற அதிபர் ஜனாப் ACM சயிட், ஓய்வு பெற்ற ஆசிரியர் MS அப்துல்ஹை, அவர்களும்
சிறப்பு அதிதிகளாக ஏறாவூர் நகரசபை கௌரவ உறுப்பினர் MSM றியாழ், மட்/மம/முனீறா பாலிகா மகா வித்தியாலய அதிபர் NM மஹாத், மட்/மம/றஹ்மானியா மகா வித்தியாலயத்தின் அதிபர் DM உவைஸ், மட்/மம/அல் ஜிப்ரியா வித்தியாலயத்தின் அதிபர் MI முகம்மட் அவர்களும்,
இல்மா ஆங்கில கற்கை நிறுவனத்தில் கல்வி பயிலும் மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
இந்நிகழ்வானது இல்மா ஆங்கில கற்கை நிறுவனத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் ஆற்றல்களை வெளிப்படுத்தும் முகமாக இந்நிகழ்வு அமைந்திருந்தது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகளால் மாணவர்களுக்கு சான்றிதழ்களும், பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
0 comments :
Post a Comment