ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பேராளர் மாநாட்டுக்கு மட்டக்களப்பு மாவட்ட போராளிகளுக்கு அனுமதி மறுப்பு!


ஏறாவூர் சாதிக் அகமட்-
ஸ்ரீ முஸ்லிம் காங்கிரஸினுடைய 30 ஆவது பேராளர் மகாநாடு புத்தளத்திலே நடைபெற்றது. குறித்த மாநாட்டுக்கு மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து சென்ற போராளிகளுக்கு நிகழ்வில் கலந்து கொள்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஏறாவூரிலிருந்தும் வாழச்சனையிலிருந்தும் முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் ஆகிய நாங்கள் 30 ஆண்டு காலமாக நடைபெற்ற பேராளர் மாநாடுகளில் கலந்து இருந்தோம். ஆனால் இன்று வளமைக்கு மாறாக எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நாங்கள் பல விடயங்களை அவர்களிடம் பேசினோம் நாங்கள் கட்சியினுடைய உண்மைப் போராளிகள் என்றும் நாங்கள் கட்சிக்காக கட்சியை வளர்ப்பதற்காக மிகவும் பகிரங்கமா முயற்சிகள் மேற்கொண்டவர்கள் என்றும் பலதடவை பல விஷயங்களை நாங்கள் குறிப்பிட்டும் அவர்கள் ஏதோ ஒரு காரணத்தால் எங்களை அனுமதிக்க மறுத்துவிட்டார்கள். நாங்கள் இப்பொழுது அனுமதி மறுக்கப்பட்டவர்களாக அந்தா இடத்தில இருந்து வெளியேறி மட்டக்களப்பு நோக்கி கொண்டிருப்பதாக அனுமதி மறுக்கப்பட்டார் தெரிவித்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :