தமிழ் தினப் போட்டியில் இலக்கிய விமர்சனம் நிகழ்ச்சியில் சம்மாந்துறை மாணவி ஷக்கியாபானு சரித்திர வெற்றி!



வி.ரி.சகாதேவராஜா-
கில இலங்கைத் தமிழ் மொழித் தினப் போட்டியில் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலை நீண்ட இடைவெளிக்குப் பிறகு சரித்திர பூர்வ வெற்றியை பெற்றது.

ஐந்தாம் பிரிவு இலக்கிய விமர்சனப் போட்டியில் செல்வி ஏ.எப். சக்கியா பானு
மூன்றாம் இடத்தைப் பெற்று பாடசாலைக்கும் ஊருக்கும் ,வலயத்துக்கும்
கிழக்கு மாகாணத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

ஆலோசனை வழங்கிய பாடசாலை முதல்வர் ஜனாபா யு.என்.ஏ. நஜீபா றஹீம்
நெறிப்படுத்தலுக்கு ஆலோசனை வழங்கிய சம்மாந்துறை வலய தமிழ் பாட
உதவிக் கல்வி பணிப்பாளர் ஏ.எல். முகம்மட் றஸீன், ஆசிரிய ஆலோசகர் இசட்.எம். மன்சூர் இம்மாணவியை வழிப்படுத்திய ஆசிரியர் சந்தக்கவி
மு.இ.அச்சிமுகம்மட், தமிழ் மொழி பாட இணைப்பாளர் ஏ .பி . முஹம்மட்
ஆகியோருக்குப் பாடசாலை சமூகம் நன்றியை தெரிவித்துக் கொண்டது.

வெற்றி பெற்றுப் பெருமை சேர்த்த மாணவிக்கு சம்மாந்துறை வலய கல்வி பணிப்பாளர் எஸ் எம் எம் அமீர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்..
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :