சாய்ந்தமருது கலைஞர்கள் ஒன்றிணைந்து முன்னெடுத்துள்ள சமூக விழிப்புணர்வு குறுந்திரைப்பட வெளியீடு




நூருல் ஹுதா உமர்-
மூகத்தின் பிரச்சினைகளையும், கூடாத பழக்கங்களையும் மக்களுக்கு எடுத்துரைத்து சமூக மாற்றத்தை நோக்கி சாய்ந்தமருது கலைஞர்கள் ஒன்றிணைந்து முன்னெடுத்துள்ள "சமூக விழிப்புணர்வு குறுந்திரைப்படம்" எதிர்வரும் வெள்ளிக்கிழமை (25) மாலை சாய்ந்தமருது அல்- ஜலால் வித்தியாலய மண்டபத்தில் திரையிடப்படவுள்ளது.

இளம் இயக்குனர் எல்.எம். சாஜித் இயக்கத்தில் டொப் குயின் அட்வர்டைசிங் நிறுவன தயாரிப்பில் பிரபல கலைஞர் அஸ்வான் சக்காப் மௌலானாவின் பிரதான நடிப்பில் வெளிவரவுள்ள இந்த நாடகங்கள் முதல் தொழுகை, பணத்திமிரு, பெண்தேவதை, குடிபோதை, வட்டியின் வினை போன்ற சிறிய பகுதிகளாக பிரிக்கப்பட்டு திரையிடப்படவுள்ளது. இந்த நாடகங்களில் பிரபல கலைஞர்களான எம்.எச்.எம்.அலிரஜாய், ஐ.ஜாபீர், இபாஸ் ஹஸ்னி, சுல்பிகா செரீப், எம்.ஐ.எம். அக்ரம், ஏ.ஆதம்பாபா, ஜே.முஸ்னத் அஹமட், பாத்திமா அன்ஹா, என்.எம்.அலிகான், எம். அல்தாப் போன்ற பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மருதம் கலைக்கூடல் மன்றம் மற்றும் தெரு பசங்க தயாரிப்பு நிறுவனம் போன்றவற்றின் இணைத்தயாரிப்பில் வெளிவரவுள்ள இந்த சமூக விழிப்புணர்வு குறுந்திரைப்பட வெளியீட்டில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக், கிழக்கு மாகாண கலாச்சார உத்தியோகத்தர் ஏ.எல்.எம்.தௌபீக், மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் ஆர்.எம். ரிம்ஸான், கிழக்கு மாகாண தகவல் தொழிநுட்ப பேரவை பணிப்பாளர் யூ.எல்.என். ஹுதா உமர், சாய்ந்தமருது பிரதேச கலாச்சார உத்தியோகத்தர்களான ஏ.எச். சபிக்கா, யுகே.எம். ரிம்ஸான், அமானா நற்பணிமன்ற தலைவர் ஏ.எல்.ஏ. பரீட், சமூக நல்லிணக்க பேரவை தலைவர் எம்.எச்.எம். இப்ராஹிம், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி என்.ஏ.அஸாம் உட்பட கலைஞர்கள், பிரதேச முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :