மோட்டார் சைக்கிள் விபத்தில் 18 வயது இளைஞன் மரணம்



எச்.எம்.எம்.பர்ஸான்-
மோட்டார் சைக்கிள் விபத்தில் 18 வயதுடைய இளைஞன் ஒருவர் மரணமடைந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்துச் சம்பவம் கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொடுவாமடு எனும் பகுதியில் நேற்று (22) இடம்பெற்றுள்ளது.

பாலர்சேனையிலிருந்து செங்கலடி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த துவிச்சக்கர வண்டியில் மோதியதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற பவளராசா சதுஷன் எனும் இளைஞன் மரணமடைந்துள்ளதுடன், மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றைய நரும், துவிச்சக்கர வண்டியில் பயணம் செய்த நபரும் படுகாயங்களுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ் விபத்தில் மரணமடைந்த இளைஞனின் சடலம் செங்கலடி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீரின் கட்டளைக்கமைவாக பிரேத பரிசோதனைக்காக சடலத்தை கரடியனாறு பொலிசார் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இவ் விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :