முழுத் தீவுக்குமான (இலங்கை) சமாதான நீதவானாக சமூக செயற்பாட்டாளர் எம்.ஏ.எம். முர்ஷித் நியமனம்



பாறுக் ஷிஹான்-
நிந்தவூர் 13 ஆம் பிரிவைச் சேர்ந்த முஹம்மது அனிபா முஹம்மது முர்ஷித் முழுத் தீவுக்குமான சமாதான நீதவானாக ( Justice of the Peace for the Whole Island) நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் அமைச்சினால் நியமிக்கப்பட்டு, கல்முனை மாவட்ட நீதிபதி ஏ.எம் முஹம்மட் றியால் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் கடந்த புதன்கிழமை (05.10.2022) செய்துகொண்டார்.

முஹம்மது அனிபா , சித்தி ஹனூன் தம்பதியினரின் கனிஷ்ட புதல்வரான இவர் நீண்ட காலமாக கலை, இலக்கியம் மற்றும் ஊடகம் சார் துறைகளில் ஈடுபாடு காட்டிவருவதோடு, இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி சபையில் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தராகவும் பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :