கல்முனை மாநகர சபையினால் வடிகான்கள் துப்புரவு செய்யும் பணி இரவு- பகலாக முன்னெடுப்பு !



நூருல் ஹுதா உமர்-
ல்முனை மாநகர சபைக்குட்பட்ட மருதமுனை- பெரியநீலாவணை பகுதியிலுள்ள வடிகான்கள் குப்பைகள் மற்றும் மண்களினால் அடைக்கப்பட்டு கடந்த பல வருடங்களாக நிர்வாக இழுபறிகள் காரணமாக துப்பரவு செய்யப்படாமல் இருந்தமையினால் பாரிய தூர்நாற்றங்கள் வீச தொடங்கியதுடன் மழை நீர் வடிந்தோட முடியாத நிலை உருவாகியிருந்தது.

இது தொடர்பில் கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல். அஸ்மியை நேரடியாக சந்தித்து சமூக செயற்பாட்டாளர் இசட்.ஏ. நௌஷாட் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய கல்முனை மாநகர ஆணையாளரின் பணிப்புக்கு இணங்க மாநகர ஊழியர்கள், சாரதிகள் இணைந்து குறித்த வடிகான்களை இரவு- பகலாக துப்பரவு செய்யும் பணியை ஆரம்பித்து முன்னெடுத்து வருகின்றனர்.

தெரியப்படுத்தி சில மணித்தியாலயங்களிலையே நடவடிக்கை எடுத்த கல்முனை மாநகர ஆணையாளர், உதவி ஆணையாளர், சுகாதாரப்பிரிவினர், பொறியியல் பிரிவினர் உட்பட மாநகர உத்தியோகத்தர்கள், ஊழியர்களுக்கு பொதுமக்கள் நன்றிகளை தெரிவித்து கொள்வதுடன் மூடிகள் இடப்படாத வடிகான்களுக்கு மூடிகளை இட துரிதகெதியில் நடவடிக்கை எடுக்குமாறும் கல்முனை மாநகர சபை நிர்வாகத்தை மக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :