விபுலானந்தா மகா வித்தியாலய மாணவர்களுக்கு மாதிரி வினாத்தாள் வழங்கி வைப்பு.



நூருல் ஹுதா உமர்-
ணைந்த கரங்கள் அமைப்பினால் கமு/சது/விபுலானந்தா மகா வித்தியாலய க.பொ.த சாதாரண பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு மாதிரி வினாத்தாள் வழங்கும் நிகழ்வானது இன்று பாடசாலை அதிபர் திருமதி. கெளசல்யா கணேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.

80 மாணவர்களுக்கான க.பொ.த சாதாரண பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு மாதிரி வினாத்தாள் வழங்கும் இந்நிகழ்வில் பாடசாலையின் உப அதிபர் கே.ரமேஸ்வரன், பகுதி தலைவர் ஆர்.ரெட்ணகுமார், பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், இணைந்த கரங்கள் அமைப்பின் பிரதிநிதிகளான லோ. கஜரூபன், எஸ்.காந்தன், கி. சங்கீத்,ரா.தஜன் ஆகியோரினால் கல்விகற்கும் மாணவர்களுக்கு பெறுமதியான மாதிரி வினாத்தாள்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் இணைந்த கரங்கள் அமைப்பின் பிரதிநிதியாக கலந்து கொண்ட லோ. கஜரூபன் கருத்து தெரிவிக்கையில் இதற்குரிய முற்று முழுதான நிதி பங்களிப்பை வழங்கிய, இணைந்த கரங்களுடாக கைகோர்த்து இடை விடாது நம் பயணத்தின் நோக்கத்தையும், நம் மாணவச் செல்வங்களின் வலியையும் உணர்ந்து அடுக்கடுக்காக இணைந்த கரங்களுடாக உதவி வரும் சகோதரி அனு குடும்பத்தினர், அவர்களது உறவினர்களும் நண்பர்களும் இணைந்து வழங்கி வருகின்றார்கள். இவர்களுக்கு என் நெஞ்சாந்த நன்றியை இணைந்த கரங்கள் ஊடாகவும், என் சார்பாகவும் கூறிக்கொள்கிறேன் என்றார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :