மட்டக்களப்பு கல்லடி இராமகிருஷ்ண மிஷன் சிறுவர்
இல்லத்தின் புதிய பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் அவர்களையும் ,உதவி முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி சுரர்ச்சிதானந்தஜி ஆகியோரை வரவேற்கும் வைபவம் நேற்று (13) வியாழக்கிழமை கல்லடியில் நடைபெற்றது.
நிகழ்வில் இலங்கை இராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்தா ஜீ மகராஜ் மற்றும் பொது முகாமையாளராக இருந்து இந்தியா திரும்பும் முன்னாள் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி தக்ஷயானந்த ஜீ மகராஜ் ஆகியோரும் கலந்து சிறப்பித்தார்.
சிவானந்தா தேசிய கல்லூரி ,விவேகானந்த மகளிர் கல்லூரி ,மிசன் பழைய மாணவர்கள், மற்றும் இகிமி நலன்விரும்பிகள், அபிமானிகள் சுவாமிகளுக்கான வரவேற்பை வழங்கினார்கள்.
கல்லடி இராமகிருஷ்ண மிஷன் சிறுவர் இல்லத்தில் வைபவம் உணர்வு பூர்வமாக நடைபெற்றது.
0 comments :
Post a Comment