இ.கி.மிஷன் கல்லடி ஆச்சிரம புதிய முகாமையாளர் ,உதவி முகாமையாளருக்கு பெருவரவேற்பு!.



வி.ரி.சகாதேவராஜா-
ட்டக்களப்பு கல்லடி இராமகிருஷ்ண மிஷன் சிறுவர்
இல்லத்தின் புதிய பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் அவர்களையும் ,உதவி முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி சுரர்ச்சிதானந்தஜி ஆகியோரை வரவேற்கும் வைபவம் நேற்று (13) வியாழக்கிழமை கல்லடியில் நடைபெற்றது.

நிகழ்வில் இலங்கை இராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்தா ஜீ மகராஜ் மற்றும் பொது முகாமையாளராக இருந்து இந்தியா திரும்பும் முன்னாள் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி தக்ஷயானந்த ஜீ மகராஜ் ஆகியோரும் கலந்து சிறப்பித்தார்.

சிவானந்தா தேசிய கல்லூரி ,விவேகானந்த மகளிர் கல்லூரி ,மிசன் பழைய மாணவர்கள், மற்றும் இகிமி நலன்விரும்பிகள், அபிமானிகள் சுவாமிகளுக்கான வரவேற்பை வழங்கினார்கள்.

கல்லடி இராமகிருஷ்ண மிஷன் சிறுவர் இல்லத்தில் வைபவம் உணர்வு பூர்வமாக நடைபெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :