துருக்கி நாட்டின் 99வது தேசிய குடியரசு தினம்



அஷ்ரப் ஏ சமத்-
துருக்கி நாட்டின் 99வது தேசிய குடியரசு தினம் 28.10.2022 காலிமுகத்திடல் ஹோட்டலில் நடைபெற்றது. இந் நிகழ்வுகள் துருக்கியத் துாதுவா் ஆர்.டிமிட் சேக்குருசி குழு தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்வியமைசச்சா் சுசில் பிரேம்ஜயந்த, சுற்றாடல்துறை அமைச்சா் நசீர் அஹமட் ஆகியோா் அதிதிகளாக கலந்து கொண்டு இலங்கை-துருக்கி நட்புறவுகள், துருக்கி நாடு இலங்கையின் அனா்த்தங்களின்போது உதவிய திட்டங்கள் மற்றும் துருக்கி இலங்கை நாடுகளுக்கிடையே கல்வி அபிவிருத்திகள் பற்றியும் உரையாற்றினாா்கள்.

இந் நிகழ்வின்போது துருக்கி நாட்டின் 99வது ஆண்டின் குடியரசின் தினத்திற்கான கேக்கினை சபாநாயகா் மகிந்த அபேரத்தின துருக்கித் துாதுவர் இணைந்து வெட்டி பகிா்ந்து கொண்டனா். இந் நிகழ்வில் வெளிவிவகார அமைச்சா் அலி சப்றி, நீதியமைச்சா் விஜயதாச ராஜபக்ச, வெளிநாட்டுத் துாதுவா்கள், துருக்கி நாட்டவா்கள் இலங்கையின் வாழ்பவா்கள், முப்படைத் தளபதிகள், பாராளுமன்ற உறுபப்பினர்களான இம்தியாஸ் பாக்கீர் மாக்காா். முஸ்லிம் காங்கிரஸ் தலைவா் ரவுப் ஹக்கீம், ஊடகவியலாளா்கள் என பலரும் கலந்து கொண்டனா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :