சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் கீழுள்ள சமுர்த்தி சமூகப் பாதுகாப்பு நிதியத்தின் மூலம் காரைதீவு பிரதேச உயர்தர மாணவர்களுக்கு சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் தலைமையில் பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எம்.எஸ்.எம். சப்றாஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு காசோலைகளை வழங்கி வைத்தார். காரைதீவு பிரதேச சமுர்த்தி உதவி பெரும் பயனாளிகளின் குடும்பங்களில் 2021-2023 கல்வியாண்டில் உயர்தரக் கல்வியை தொடர்கின்ற மாணவர்களின் கல்வி ஊகக்குவிப்புக்காக குறித்த சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் வழங்கப்படுகின்றது.
இந்நிகழ்வில் தலைமைப் பீட சமுர்த்தி முகாமையாளர் எம் எம் அச்சிமுகமட், சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment