கோட்டமட்ட ரீதியாக நடைபெற்ற ஆங்கில தினப் போட்டியில் மீராவோடை அல் ஹிதாயா தேசிய பாடசாலை முதலிடம் பெற்றுள்ளதாக பாடசாலை அதிபர் கே.எல்.எம்.சபாஹிர் தெரிவித்தார்.
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டத்திலுள்ள பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியிலேயே எமது பாடசாலை முதலிடம் பெற்றுள்ளதாக அதிபர் மேலும் தெரிவித்தார்.
இதில், 5 மாணவர்கள் முதலாம் இடத்தையும், 8 மாணவர்கள் 2 ஆம் இடத்தையும், 5 மாணவர்கள் 3 ஆம் இடத்தையும் பெற்றுள்ளனர்.
குறித்த போட்டியில் சிறந்த முறையில் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கும், தயார்படுத்திய ஆசிரியர்களுக்கும் அதிபர் கே.எல்.எம்.சபாஹிர் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment