ஓட்டமாவடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையில் இருந்து மாகாண மட்ட எல்லே போட்டியில் கலந்து கொள்ளவுள்ள வீரர்களுக்கான புதிய சீருடை அறிமுக நிகழ்வு (16) இடம்பெற்றது.
இந்நிகழ்வு பாடசாலை மாணவர் நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் அதன் பொறுப்பாசிரியர் ஏ.ஜீ. அஸீஸுல் றஹீம் தலைமையில் இடம்பெற்றது.
எல்லே அணியினருக்கு புதிய சீருடையினை ஹயா இன்டர் நஷ்னல் கலக்ஷன் பிரைவட் லிமிடெட் மற்றும் ஹயா ஷோசியல் பவுண்டேஷன் ஆகியவற்றின் பணிப்பாளர் ஏ.எல்.நஜிமுதீனினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வின்போது, புதிய சீருடையினை பெற்றுக் கொடுத்த நிறுவனப் பணிப்பாளர் ஏ.எல்.நஜிமுதீன் அதிபர் எம்.ஏ.ஹலீம் இஸ்ஹாகினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
அத்துடன், மாணவர்களை பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியர் ஏ.எம்.ஜிப்ரிக்கு அதிபர் பாராட்டுக்களை தெரிவித்தார்.
இந்நிகழ்வில்,அதிதிகளாக பாடசாலை அதிபர் எம்.ஏ.ஹலீம் இஸ்ஹாக், பிரதி அதிபர்களான எம்.எல்.எம்.இப்றாகீம், எம்.ரீ.எம்.றியாஸ் மற்றும் பகுதித் தலைவர்களான எம்.எல்.எம்.நஜீம், யூ.எல்.எம்.றியாஸ், ஜே.எம்.றிஸ்வான், ஐ.அலாப்தீன், எம்.ஐ.எம்.முஸம்மில் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment