அம்பாறை மாவட்டம் கல்முனை கடற்கரை பள்ளிவாசல் அண்டிய பகுதியில் காணப்படும் கடற்கரை வீதி தொடர்ச்சியாக வெள்ளிக்கிழமை உட்பட வார இறுதி நாட்களில் பிற்பகல் நேரத்தில் வாகன நெரிசலினால் வீதியினால் பயணம் செய்வோர் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக விசனம் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் குறித்த கடற்கரை பள்ளிவாசலின் அருகில் வாகன தரிப்பிட வசதிகள் முறையாக இன்மையினால் பெரும் சிரமத்தை எதிர் நோக்குவதை அவதானிக்க முடிகின்றது
வெள்ளிக்கிழமை உட்பட வார இறுதி நாட்களில் சனிக்கிழமை,ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் நேரங்களில் சுமார் ஆயிரக்கணக்கான பொது மக்கள் கடற்கரை பள்ளிவாசல் உட்பட கடற்கரை பகுதிகளுக்கு பொழுதைக் கழிக்க வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் பிரதேச அரசியல்வாதிகள் உரிய அதிகாரிகள் உடனடியாக கவனமெடுக்குமாறு பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
கல்முனை கடற்கரை பள்ளிவாசல் வரலாற்று முக்கியத்துவமிக்க பகுதி என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
0 comments :
Post a Comment