வெளியான க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேற்றின் படி ஓட்டமாவடி தேசிய பாடசாலை மாணவன் எம்.ஐ.எம்.ஸம்ஹான் மருத்துவ பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவர், 2 ஏ, 1 பி பெறுபேறுகளுடன் மாவட்டத்தில் 24 ஆம் இடத்தைப் பெற்று சித்தியடைந்துள்ளார்.
இவர், ஓட்டமாவடி மூன்றாம் வட்டாரத்தில் வசித்து வரும் எச்.எம்.எம்.இஸ்மாயில் ஆசிரியர், எம்.எல்.எப்.மஸாஹிரா (மரியம் பீபி) தம்பதிகளின் புதல்வராவார்.
சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்கும் பிரதேசத்திற்கும் பெருமை தேடிக் கொடுத்துள்ள மாணவன் ஸம்ஹானுக்கு பாடசாலை அதிபர் எம்.ஏ.ஹலீம் இஸ்ஹாக் மற்றும் கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள் முக்கியஸ்தர்கள் எனப்பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment