மட்டக்களப்பு ஏறாவூர் ஐந்தாம் குறிச்சிஸ்ரீ கருமாரி அம்பாள் ஆலய வருடாந்தஉற்சவம் கடந்த 29.07.2022 அன்றுமடையெடுப்பு வைபத்துடன்ஆரம்பமாகி ஞாயிறன்று 08.07.2022 தீமிதிப்பு கன்னிமார் பள்ளய வைபவத்துடன் நிறைவு பெற்றது.
திருக்கதவு திறத்தல், வீரகம்பம் எடுத்துவருதல், உள் வெளி வீதி உலா வருதல், அரும்பு படைக்கும் நிகழ்வுகள், வினாயகப்பானை எடுத்து வருதல் உள்ளிட்ட நிகழ்வுகளோடு இறுதியாக தீமிதிப்பு கன்னிமார் பள்ளயத்துடன் ஆலய வருடாந்த உற்சவ நிகழ்வுகள்நிறைவுக்கு வந்தன.
ஆலய வருடாந்த உற்சவ நிகழ்வுகளில்உள்ளுர் வெளியூர்களில் இருந்து வந்துபெரும் எண்ணிக்கையிலான பக்தர்கள்கலந்து கொண்டனர்.
இறுதி நிகழ்வாக ஆலயத்தில்அன்னதானம் இடம்பெற்றது. கொடையாளி நவரெத்தினராசாசுபாசங்கர் இந்த அன்னதானத்திற்குநிதி அனுசரணை
பன்னிரண்டு வருட காலமாக இன்று அன்னதானம் அவர்களால் வழங்கிவைக்கப்பட்டது என்றும் ஆலய நிருவாகத்தினர் தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment