கல்வி அமைச்சு மற்றும் யுனஸ்கோ நிறுவனம் நடாத்தும் (கல்வியில் ஒட்டுணர்வு) நிகழ்ச்சித் திட்ட நிகழ்வுகள்


எம்.ஜே.எம்.சஜீத்-
ட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியில் EMPATHY (கல்வியில் ஒட்டுணர்வு) நிகழ்ச்சித் திட்டம் நேற்றும் இன்றும் (22,23) கல்லூரியின் பீடாதிபதி சட்டத்தரணி கே.புண்ணியமூர்த்தி அவர்களின் தலைமையில்; நடைபெற்றது.

யுனஸ்கோவின் (unesco) அனுசரணையுடன் கல்வி அமைச்சினால் நடாத்தப்பட்ட இந்நிகழ்ச்சி திட்டம் விரிவுரையாளர்களான கே.பத்மராஜா, ஏ. நளீம் அவர்களுடன் மட்டக்களப்பு தேசிய கல்வியியற் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர்களான எம்.எல்.ஏ. வாஜீத், எஸ்.ஜெயராஜா ஆகியோரின் வழிகாட்டலில் இடம்பெற்றது.
முதலாம் நாள் ஆசிரிய பயிலுனர்களுக்கு முழுமையாக பயிற்சியளிக்கப்பட்டதோடு, இரண்டாம் நாள் நிகழ்வில், கல்வி அமைச்சின் சமாதானம், நல்லிணக்கம் மற்றும் பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கான பணிப்பாளர் திருவாளர் எஸ்.முரளீதரன் பிரதம விருந்தினராகவும், மட்டக்களப்பு தேசிய கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி எம்.ஐ.எம். நவாஸ் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ஆசிரிய பயிலுனர்களின் ஒட்டுணர்வு தொடர்பான ஆக்கங்கள் கல்லூரிவளாகம் முழுவதும் காட்சிப்படுத்தப் பட்டிருந்ததோடு அதனை வெளிக்கொணரும் விதமான கலை நிகழ்சிகளும் அரங்கேற்றப்பட்டன. அத்துடன் பங்கு பற்றிய ஆசிரிய பயிலுனர்களுக்கான சான்றிதழ்களை பீடாதிபதி மற்றும் அதிதிகள், உபபீடாதிபதிகள், வளவாளர்கள், கல்லூரி விரிவுரையாளர்கள் ஆகியோர் வழங்கி வைத்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :