சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளராக அமீர் நியமனம்



வி.ரி. சகாதேவராஜா-
ம்மாந்துறை வலய கல்வி பணிப்பாளராக இலங்கை கல்வி நிருவாக சேவையின் ம முதலாம் பெற அதிகாரி யான எஸ். எம்.எம். அமீர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் புதன்கிழமை(10) தனது பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார்.

நேற்று, ஏழாவது பணிப்பாளராக பதவியேற்ற அவருக்கு மாலை சூடி பெருவரவேற்பு அளிக்கப்பட்டது.

அச்சமயம், முன்னாள் சம்மாந்துறை வலய கல்வி பணிப்பாளர் எம். எஸ் .சஹதுல் நஜீம் மற்றும் கல்வி அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தார்கள்.

சம்மாந்துறை வலய கல்வி பணிமனையில் பிரதி கல்வி பணிப்பாளராக கடமையாற்றி வந்த அமீர் மருதமுனையைச் சேர்ந்தவர் ஆவார்.

அவர்நேற்று முதல் வலயக்கல்விப் பணிப்பாளராக பதவி உயர்வு பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, சம்மாந்துறை வலய கல்வி பணிப்பாளராக இருந்து இடமாற்றம் பெற்ற எம். எஸ் சஹதுல் நஜீம் நேற்று கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளராக பதவி ஏற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :