சம்மாந்துறை வலய கல்வி பணிப்பாளராக இலங்கை கல்வி நிருவாக சேவையின் ம முதலாம் பெற அதிகாரி யான எஸ். எம்.எம். அமீர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் புதன்கிழமை(10) தனது பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார்.
நேற்று, ஏழாவது பணிப்பாளராக பதவியேற்ற அவருக்கு மாலை சூடி பெருவரவேற்பு அளிக்கப்பட்டது.
அச்சமயம், முன்னாள் சம்மாந்துறை வலய கல்வி பணிப்பாளர் எம். எஸ் .சஹதுல் நஜீம் மற்றும் கல்வி அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தார்கள்.
சம்மாந்துறை வலய கல்வி பணிமனையில் பிரதி கல்வி பணிப்பாளராக கடமையாற்றி வந்த அமீர் மருதமுனையைச் சேர்ந்தவர் ஆவார்.
அவர்நேற்று முதல் வலயக்கல்விப் பணிப்பாளராக பதவி உயர்வு பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, சம்மாந்துறை வலய கல்வி பணிப்பாளராக இருந்து இடமாற்றம் பெற்ற எம். எஸ் சஹதுல் நஜீம் நேற்று கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளராக பதவி ஏற்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment