பாராளுமன்ற நிதிக்குழுவின் தலைவராக ஹர்ஷ டி சில்வா



ன்பதாவது பாராளுமன்றத்தின் அரசாங்க நிதி தொடர்பான பாராளுமன்ற குழுவின் தலைவர் பதவிக்கு ஐக்கிய மக்கள் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வாவை நியமிக்க தெரிவுக்குழு தீர்மானித்துள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நேற்று (11) பிற்பகல் தெரிவுக்குழு கூடியது. அந்தக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாரளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி அனுர பிரியதர்ஷன யாப்பா ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது சபையில் நிதி தொடர்பான பாராளுமன்றக் குழுவின் தலைவராக பதவி வகித்தார்.

கோப், கோபா உள்ளிட்ட பாராளுமன்றக் குழுக்களின் தலைவர் பதவிகளை எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு வழங்குமாறு எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல அண்மையில் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

அப்போது சபாநாயகர் தனது உடன்பாட்டை தெரிவித்ததாக லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
ஆனால் கோப், கோபா உள்ளிட்ட பல குழுக்களின் தலைவர் பதவிகளுக்கு இன்னும் எம்.பி.க்கள் நியமிக்கப்படவில்லை.

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு முடிவடைந்தவுடன், ஏறக்குறைய எழுபது பாராளுமன்றக் குழுக்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும், ரத்து செய்யப்பட்ட பல குழுக்கள் ஏற்கெனவே தேர்வுக் குழுவால் நியமிக்கப்பட்டுள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :