ஓட்டமாவடியில் இடம் பெற்ற இரத்ததானம்


எஸ்.எம்.எம்.முர்ஷித்-
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் இரத்ததான முகாம் செயலக கேட்போர் கூடத்தில் நேற்று புதன்கிழமை இடம் பெற்றது.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வீ.தவராஜாவின் தலைமையில் செயலக இளைஞர் சேவை உத்தியோகத்தர் எஸ்.ஐ.எம்.பஸீலின் ஒருங்கமைப்பில் இரத்ததான முகாம் நடைபெற்றது.

குறித்த இரத்த தான முகாமில் செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச இளைஞர் கழக சம்மேள பிரதிநிதிகள், பொது மக்கள் என நூற்றுக்கு மேற்பட்ட ஆண், பெண் இரு பாலாரும் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கி வைத்தனர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவு வைத்தியர் ஜி.சுகன்யா தலைமையில் இரத்த வங்கி பிரிவு உத்தியோகத்தர்கள் இரத்ததானத்தில் கலந்து கொண்டு குருதிகளை பெற்றுக் கொண்டனர்.

இரத்தானம் வழங்கிய அனைவருக்கும் ஓட்டமாவடி பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தினால் நினைவு சின்னமும் வழங்கி வைக்கப்பட்டதுடன் சம்மேளத்தின் அங்கத்தவர்களுக்கான ரீசேட்டும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

நாட்டின் இரத்த வங்கியில் ஏற்பட்டுள்ள குருதித் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்காக வேண்டி ஓட்டமாவடி பிரதேச இளைஞர் கழக சம்மேளனம் இந்த இரத்ததான முகாமை ஏற்பாடு செய்ததாக இளைஞர் சேவை உத்தியோகத்தர் எஸ்.ஐ.எம்.பஸீல் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :