ஈஸ்டர்ன் பைட்டர்ஸ் நண்பர்கள் அமைப்பினால் மையவாடி சிரமதானம் முன்னெடுப்பு !



நூருல் ஹுதா உமர்-

சாய்ந்தமருது ஈஸ்டர்ன் பைட்டர்ஸ் நண்பர்கள் வட்டம் மற்றும் அமைப்பினால் சாய்ந்தமருது தக்வா ஜும்மா பள்ளிவாசலுக்கு சொந்தமான மையவாடியினை சுத்தம் செய்யும் வேலைத் திட்டமொன்று இன்று ஈஸ்டர்ன் பைட்டர்ஸ் நண்பர்கள் வட்டம் மற்றும் அமைப்பின் பொதுச்செயலாளர் லாபீர் சிப்னாஸ் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.

பற்றைக்காடாக வளர்ந்திருந்த சிறிய மரங்கள், புற்கள் வெட்டி அகற்றப்பட்டதுடன் அழகாக சிரமதானம் செய்யப்பட்டது. இந்த பணியில் சாய்ந்தமருது ஈஸ்டர்ன் பைட்டர்ஸ் நண்பர்கள் வட்டம் மற்றும் அமைப்பின் உறுப்பினர்கள், சமூக நலன் விரும்பிகள், சாய்ந்தமருது நடுத்துரை மீனவர் சங்கத்தினர்கள் மற்றும் பொது மக்கள் எனப்பலரும் பங்கேற்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :