அம்பாறை மாவட்ட அரச சார்பற்ற நிறுவனமான நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் அமைப்பு "மாணவர் மகிமை" வேலைத்திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கான இலவச கற்றல் ஏடுகள் கையளிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக பாதிக்கப்படும் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு கரம் கொடுக்கும் நோக்குடன் முன்னெடுக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ் 2022 கல்வியாண்டில் மாணவர்களுக்கு இதுவரை கிடைக்கப் பெறாத பாடநூல்கள் வழங்கி வைக்கப்பட்டன
இதற்கமைய கல்வி வெளியிட்டு திணைக்களத்தில் இருந்து குறைவாக கிடைக்கப் பெற்ற தரம் 5 ஆங்கில பாட நூல்கள் மற்றும் தரம் 2 கணிதம் செயல்நூல் ஆகிய பாடப் புத்தகங்கள் பெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் அமைப்பினால் பிரதி செய்யப்பட்டு புத்தகங்களாக மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன
நிந்தவூர் கமு/ கமு/ அட்டப்பள்ளம் விநாயகர் வித்தியாலய அதிபர் எஸ் ரகுநாதன் தலைமையில் நடைபெற்ற வித்தியாலயத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பெஸ்ட் ஒப் யங் அமைப்பின் தலைவர் ஐ எம் நிஸ்மி, அமைப்பின் செயலாளர் ஏ புஹாது, ஆகியோரும் கலந்து கொண்டு பாட நூல்களை கையளித்து வைத்தனர்
0 comments :
Post a Comment