இலங்கை சினிமாவின் மக்கள் நட்சத்திரம் ஹேமல் ரணசிங்க நடிகராக நடித்த தமிழ் திரைப்படமான "செகண்ட் ஷோ" எனும் திரைப்படமானது திருகோணமலை நெல்சன் திரையரங்கில் நேற்று (08) திரையிடப்பட்டது.
இத் திரைப்படமானது இலங்கையில் உள்ள டார்க் ரூம் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் மற்றும் தமிழ் நாட்டில் உள்ள சிவா பிரதர்ஸ் இணைந்து இப் படம் தமிழ் மூலமாக தயாரிக்கப்பட்டுள்ளது. இலங்கை நடிகர் ஹேமல் ரணசிங்க மற்றும் தமிழ் நாட்டினை சேர்ந்த நடிகை மற்றும் சிலரை கொண்டு இலண்டனில் காட்சி படத் தயாரிப்பு அனைத்தும் ஒளி வடிவமாக பெறப்பட்டு திரைப்படமாக தயாரிக்கப்பட்டுள்ளது. இளைஞர்களுக்கான ஒரு விழிப்புணர்வு திரைப் படமாக இது எடுத்துக்காட்டுகிறது. பெண்கள் என்பது பாலியலுக்காக மாத்திரமன்றி மற்றும் போதை பழக்கமே ஒரு ஆணை பெண்ணின் பாலியல் ரீதியான துஷ்பிரயோகத்துக்கு தூண்டுகிறது என பல விழிப்புணர்வுகளை சமூக மட்டத்தில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து பல கதாபாத்திரங்களுடன் இத் திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதில் திருகோணமலையை சேர்ந்த சகோதர மொழி இளைஞர் யுவதிகள்,தமிழ் பேசும் இளைஞர் யுவதிகள் என பலரும் கலந்து கொண்டு இத் திரைப்படத்தை கண்டு கழித்ததுடன் திரைப்பட கதாநாயகன் இலங்கை நடிகர் ஹேமல் ரணசிங்க, டாக் ரூம் படத் தயாரிப்பின் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் கௌசல்யா விக்ரமசிங்க, சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment