அரச வலைத்தளத்தில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் அகற்றப்பட்டது ஏன்? காரைதீவு பிரதேச சபை தவிசாளர் ஜெயசிறில் கேள்வி.



காரைதீவு சகா-
டந்த நான்கு மாதங்களுக்கு முன்பாக காணி பதிவகத்தில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட காணி பதிவக உரிமை மறுக்கப்பட்டது.அதேவேளை இவ்வாரம் அரச வலைத்தளத்தில் இருந்து கல்முனை வடக்கு பிரதேச செயலக 29கிராம சேவகப் பிரிவுகளும் முழுமையாக அகற்றப்பட்டுள்ளது.எந்த அடிப்படையில் இது நியாயம் ?

இவ்வாறு காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் கேள்வி எழுப்பியுள்ளார்.

அரச வலைத்தளத்தில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் அகற்றப்பட்டமை தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவர் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது...

1993 ஆண்டு முதல் முழு அதிகாரத்தோடும் இயங்கி வந்த கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை வர்த்தமானி அறிவித்தல் இல்லை என கூறி துண்டாக துண்டாக கூறுபோட்டு வருகின்றார்கள்.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தி க்கு இதுவரையில் வர்த்தமானி அறிவித்தல் இல்லை. ஆனால் சுயாதீனமாக இயங்குகின்றது.
ஆனால் இன்று 29கிராம சேவகர் பிரிவையும் உள்ளடக்கி செயல்படும் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் சுயாதீன தன்மையை இல்லாதொழிக்க மிகத் தீவிரமாக இனவாத அரசியல்வாதிகளும் இனவாத அமைப்புக்களும் செய்கின்றன.இதற்கு அரச அதிகாரிகளும் துணை செல்கின்றனரா?
கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பாக காணி பதிவகத்தில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட காணி பதிவக உரிமை மறுக்கப்பட்டது.அதேவேளை இன்று அரச வலைத்தளத்தில் இருந்து கல்முனை வடக்கு பிரதேச செயலக 29கிராம சேவகப் பிரிவுகளும் முழுமையாக அகற்றப்பட்டுள்ளது.எந்த அடிப்படையில் இது நியாயம் ?

அதேவேளை ஒன்றைச் சிந்திக்க வேண்டும் உப பிரதேச செயகலமான தோப்பூர் பிரதேச செயலகத்துக்கு இலக்கமிடப்பட்டு அவை அமைச்சின் அரச வலைத்தளத்தில் காட்டப்படுகின்றது. இது அரச கட்டமைப்பில் இனவாத அரசியல் தலையீட்டின் உச்சம் என்றே சொல்ல வேண்டும். பாகுபாட்டுடன் தொடர்ந்து கல்முனை மக்கள் புறக்கணிக்கப்பட்டு நடத்தப்படுமானால் இன நல்லிணக்கம் என்ற சொல்லை தேடிச் செல்ல வேண்டி நிலை ஏற்படும். கல்முனை மக்களின் மனநிலை மிக கொதிப்படைந்துள்ளது. விரைவில் இதற்கான முடிவு ஒன்றினை பெற வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :