பாணந்துறை ஜீலான் தேசிய பாடசாலையில் 5ஆம் ஆண்டு புலமைப்பரிட்சையில் சிந்தியடைந்த மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு வைபவமும் . ஆரம்பப்பாடசாலை
யின்மாணவ மாணவிகளது கலை நிகழ்ச்சிகளும் கல்லுாாி கூட்ட மண்டபத்தில் கல்லுாாி அதிபா் றிஸ்னி அஹமட் தலைமையில் நடைபெற்றது
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக தமிழ் மொழி உதவிக் கல்விப் பணிப்பாளா் எம். எம் ஜெயக்குமாா் மற்றும் தமிழ் மொழி உதவிக் கல்விப் பணிப்பாளா்
எம்.ரீ.எம். இல்யாஸ், ஆசிரியை முமீமனா நியாஸ் தீன், பாடசாலையின் ஆசிரிய ஆசிரியைகளும் மற்றும் பழைய மாணவ செயலாளா் பாடசாலை அபிவிருத்திச் குழுச் செயலாளா் உறுப்பிணா்களும் பெற்றோா்களும் கலந்து கொண்டனா்.
நபீல் அப்துல் பாசித், 174 புள்ளிகளையும் முஹமட் றிஸ்மி பாத்திமா சபா 169 புள்ளிகளையும் ,பர்சாத் மொஹமட் உமா் 167 புள்ளிகளையும் ஏனைய 7 மாணவ மாணவிகளுக்கும் மேலும் 50 மாணவாகளுக்கும் பரிசில்கள் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது.
அத்துடன் ஆரம்பப்ப பாடசாலை மாணவா்களது குழுப் பாடல் நடன நிகழ்வுகளும் மேடையேற்றப்பட்டன. அத்துடன் சகல மாணவ மாணவிகளது
பெற்றோா்களும் இந் நிகழ்வில கலந்து சிறப்பித்தனா்
இங்கு உரையாற்றிய பிரதம அதிதி ஜெயக்குமாா் கூறுகையில் - இப் பாடசாலையின் அபிவிருத்தி மற்றும் நிகழ்வுகளில் அதிபா் ஆசிரியா்களோடு இணைந்து
பாடசாலை பழைய மாணவா்கள் இணைந்து ஒன்றுமையாக செயலாற்றி வருவதனால் பாணந்துறை ஜீலான் பாடசாலை தேசிய பாடசாலை மட்டத்தில் முன்னேற்ற கண்டுள்ளது.
0 comments :
Post a Comment