காத்தான்குடியில் முஹர்ரம் புதுவருட கலைப் பெருவிழா - 2022



நூருல் ஹுதா உமர்-
காரிகை கலை இலக்கியக் கழகத்தின் இவ்வருட இஸ்லாமிய முஹர்ரம் புதுவருடக் கலைப் பெருவிழா காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் அமைப்பின் ஸ்தாபகத் தலைவி இலக்கியச் சுடர் ஜாஹிதா ஜலால்தீன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் 6 பாடசாலை அதிபர்களுக்கு " காரிகை திலகம்" பட்டம் சூட்டப்பட்டு, நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், கலை இலக்கியத் துறைக்கு ஆற்றிய பெரும் பங்களிப்பினைப் பாராட்டி 12 கலைஞர்களுக்கு "கலைக்காரிகை" பட்டம் இதன்போது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இங்கு கவியரங்கு, தகறா, கோலாட்டம், நாட்டார் பாடல் என சிறார்களின் கண்கவர் கலை நிகழ்வுகளும், இஸ்லாமிய கீதம், நாட்டார் பாடல், கோலாட்டம், பெண் கவிதாயினிகளின் கவிதையரங்கு என்பன காரிகை கலை இலக்கியக் கழக அங்கத்தவர்களால் அரங்கேற்றப்பட்டன.

காரிகை கலை இலக்கியக் கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந் நிகழ்விற்கு கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் சரண்யா சுதர்ஷன் மற்றும் காத்தான்குடி பிரதேச செயலாளர் யூ.உதயஸ்ரீதர் ஆகியோர் பிரதம அதிதிகளாகவும், சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் ரீ. குணபாலா, மட்டக்களப்பு மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரீ. மலர்ச்செல்வன், காத்தான்குடி பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் மௌலவி. எம்.ஐ.எம்.ஜவாஹிர் மற்றும் காத்தான்குடி பிரதேச செயலக கலாசார அபிவிருத்தி உதவியாளர் வீ.சிந்து உஷா ஆகியோர் விசேட அதிதிகளாகவும் சிரேஸ்ட இலக்கியவாதிகளான கவிமணி புகாரி பலாஹி, மௌலவி பௌஸ் (சர்கி) மற்றும் மௌலவி மன்சூர், காரிகை கலை இலக்கியக் கழகத்தின் செயலாளர் ஹாஜரா கலீலுர் றகுமான் மற்றும் பொருளாளர் முப்லிஹா பிர்தௌஸ் உள்ளிட்ட கழகத்தின் உறுப்பினர்கள், கலைஞர்கள், இலக்கிய ஆர்வலர்கள், சிறுவர்கள், பெற்றோர்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :