மட்டுப்படுத்தப்பட்ட ஏறாவூர் ஆட்டோ உரிமையாளர்கள் நலன்புரி கூட்டுறவுச் சங்க உறுப்பினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட கலந்துரையாடல் நேற்று ஆட்டோ சங்க காரியாலயத்தில் ஆட்டோ சங்கதின் தலைவர் எம். காலிதீன் தலைமையில் இடம் பெற்றது.
இக்கலந்துரையாடலில் ஏறாவூர் நகரசபையின் தவிசாளர்எம்.எஸ்.நழீம், ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் நிஹாறா மௌஜூத், ஏறாவூர் போக்குவரத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட ஆட்டோ சங்கத்தின் உறுப்பினர்கள் அங்கத்தவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.
இக்கலந்துரையாடலில் பெற்றோல் பெற்றுக் கொள்வதில் ஏற்படும் சிரமம், கட்டண மீற்றர் சம்மந்தமாக கலந்துரையாடப்பட்டது.
இந்நிகழ்வில் ஆட்டோ சங்கத்தினரால் அதன் உறுப்பினர்களுக்கு உலர் உணவுப் பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டது.
0 comments :
Post a Comment